search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவாரம் மக்னா யானை"

    தேவாரம் அருகே மீண்டும் ஆட்கொல்லி யானையான மக்னா வயல்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் அச்சதடைந்துள்ளனர். #MagnaElephant

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தோட்டங்களில் கடந்த சில மாதங்களாக மக்னா எனும் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோட்டங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதுடன் காவலாளிகளையும் தாக்கியது.

    இதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகளை வரவழைத்தனர். அதன் பிறகு ஒற்றை யானை நடமாட்டம் அடியோடு நின்றது.

    2 மாதங்களாக தேவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கும்கி யானைகள் மீண்டும் டாப் சிலிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இதனால் ஒற்றை யானை மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளது.

    நேற்று மூனாண்டிப்பட்டி, தேவாரம் ஆகிய பகுதிகளில் புகுந்து சேதப்படுத்தியது. இன்று காலை தாழையூற்று பகுதியில் உள்ள மணி என்பவரது தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த 5 தென்னை மரங்களை முறித்தது. மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கப்பைக்கிழங்கு செடிகளையும் சேதப்படுத்தியது.

    கும்கி யானைகள் இங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த போது ஒற்றை யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால் இப்பகுதியில் நிரந்தரமாக அதனை விரட்டும் வரை கும்கி யானைகளை தங்க வைக்க வேண்டும்.

    இவ்வையெனில் யானையை விரட்டுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவாரம் அருகே விளைநிலங்களில் புகுந்து மக்னா யானை நாசம் செய்தது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை, வாழை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர்.

    மேற்குதொடர்ச்சி வனப்பகுதியில் வசித்து வரும் மக்னாயானை அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு புகுந்த மக்னா யானை சோளப்பயிர்களை நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்தனர். இரவு நேரத்தில் தோட்டக்காவலுக்கும் செல்ல அச்சமடைந்தனர்.

    இதனால் பெரம்புட்டிஓடை, சாக்கலூத்துமெட்டு பகுதியில் வனத்துறையினர் வெடிவெடித்தும், ஓசைஎழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருந்தபோதும் மக்னா யானை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தற்போது மீண்டும் இங்குள்ள விளைநிலங்களில் புகுந்து 20 தென்னைமரங்கள் மற்றும் மரவள்ளி கிழங்குகளை சூறையாடிச்சென்றது.

    இதைபார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இதுகுறித்து உத்தமபாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனஅலுவலர் ஜீவனா தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், மக்னா யானையால் தினமும் அவதியடைந்து வருகிறோம். காவலுக்கு செல்லக்கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதேநிலை தொடர்ந்தால் விவசாயம் செய்வது பெரும் சவாலாகிவிடும். எனவே வனத்துறையினர் மக்னா யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    ×